ஒலிச் சேகரம்
-
- உலகப் புத்தக நாள் 2018 நிகழ்வு (யாழ்ப்பாணம்)
- யாழ்ப்பாணப் பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 22.04.2018 ஞாயிறு மாலை 3 மணிக்கு நூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடந்த நிகழ்வின் ஒலிப்பதிவு. * தலைமை : அ. யேசுராசா * புத்தகத்தின் வழிப்படம்: ச. சத்தியதேவன் * எனக்குப் பிடித்த புத்தகங்கள் சில : குப்பிழான் ஐ. சண்முகன் * சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறி : தி. செல்வமனோகரன் * வ. அ. இராசரத்தினம் படைப்புலகம் : த. அஜந்தகுமார் * கி. ராஜநாராயணன் படைப்புலகம் : சோ. பத்மநாதன்
-
- மக்கள் இலக்கிய வரிசையில் நிக்கோலாய் ஒஸ்ரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது
- ஒக்ரோபர் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக (1917-2017) கலை இலக்கிய ஆய்வரங்குத் தொடர் 04. தேசிய கலை இலக்கியப் பேரவையினரின் நிகழ்ச்சி.
-
- அறிஞர் ஐராவதம் மகாதேவன் (நினைவுக் கருத்தரங்கம்)
- சமூகவெளி படிப்பு வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் விழுதுகளிலிருந்து வேர்களை நோக்கி என்ற கருத்தரங்கத் தொடரின் 29 ஆவது நிகழ்வாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) பற்றி நடைபெற்ற கருத்தரங்கம். 2019-01-06 ஞாயிற்றுக்கிழமை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.